CRIKET NEWS

பெண்கள் உலக கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி 281 ரன்கள் குவிப்பு ஹர்மன்பிரீத் கவுர் 171 ரன்கள் விளாசினார்
டெர்பி, 

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி ஹர்மன்பிரீத் கவுரின் அதிரடி ஜாலத்தால் 281 ரன்கள் குவித்தது.

42 ஓவர்களாக குறைப்பு
11–வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் டெர்பியில் நேற்று நடந்த 2–வது அரைஇறுதியில் இந்தியாவும், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. பலத்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 3 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் 42 ஓவர் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் மிதாலிராஜ் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவுக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை. மந்தனா 6 ரன்னிலும், பூனம் ரவுத் 14 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.

இதன் பின்னர் கேப்டன் மிதாலிராஜிம், ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்கோர் 101 ரன்களை எட்டிய போது மிதாலிராஜ் (36 ரன், 61 பந்து, 2 பவுண்டரி), பீம்சின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

ஹர்மன்பிரீத் கவுர் சதம்
இதைத் தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுருடன் தீப்தி ‌ஷர்மா ஜோடி சேர்ந்தார். ஆரம்பத்தில் நிதானம் காட்டிய ஹர்மன்பிரீத் கவுர் அதன் பிறகு அதிரடியில் இறங்கினார். பந்துகளை நாலாபுறமும் சிதறடித்த அவர் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 98 ரன்னில் இருந்த போது 2–வது ரன்னுக்கு எதிர்முனையில் நின்ற தீப்தி ‌ஷர்மா தயக்கம் காட்டிய பிறகே ஓடி வந்தார். இதனால் ஹர்மன்பிரீத் கவுர், பாய்ந்து விழுந்து ரன்–அவுட்டில் இருந்து தப்பித்து தான் சதத்தை எட்டினார். சதம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தாமல் கோபத்தில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து விட்டார். சில வினாடிக்கு பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்து பேட் செய்தார்.

90 பந்துகளில் தனது 3–வது சதத்தை பூர்த்தி செய்த ஹர்மன்பிரீத்கவுர் லேசான தசைப்பிடிப்பாலும் அவதிப்பட்டார். ஆனாலும் அவரது சரவெடி ஆட்டம் மட்டும் தணியவில்லை. கார்ட்னெரின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விரட்டியடித்து மிரள வைத்தார். அடுத்த 17 பந்துகளை சந்திப்பதற்குள் மேற்கொண்டு 50 ரன்கள் திரட்டி விட்டார். ரன்ரேட்டும் 6 ரன்களுக்கு மேலாக பறந்தது. மறுமுனையில் தீப்தி ‌ஷர்மா தனது பங்குக்கு 25 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அதே சமயம் சிக்சர் மழையுடன் ஹர்மன்பிரீத் கவுர் நடத்திய ருத்ரதாண்டவத்தை கடைசி வரை ஒன்றும் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் நொந்து போனார்கள்.

281 ரன்கள் குவிப்பு
நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் 171 ரன்களுடனும் (115 பந்து, 20 பவுண்டரி, 7 சிக்சர்), வேதா கிருஷ்ணமூர்த்தி 16 ரன்னுடனும் (2 பவுண்டரி) களத்தில் இருந்தனர். கடைசி 12 ஓவர்களில் மட்டும் நமது வீராங்கனைகள் 149 ரன்களை சேகரித்தனர்.

அடுத்து 281 ரன்கள் இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. 9 ஓவர் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுக்கு 25 ரன்னுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

--–

ஹர்மன்பிரீத் கவுர் சாதனை

Comments